மனைவி மாயம் . கணவர் புகார்

மனைவி மாயம் . கணவர் புகார்
X
மதுரை உசிலம்பட்டி அருகே மனைவியை காணவில்லை என்று கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொட்டப்ப நாயக்கனூர் செட்டியபட்டி காலனியில் வசிக்கும் கண்ணனின் மனைவி ராஜலட்சுமி (38) என்பவர் கடந்த 25ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது கணவர் கண்ணன் நேற்று (செப்.12) மாலை உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story