அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை

X

மதுரை செக்கானூரணி அருகே அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புளியங்குளம் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் என்பவருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று (செப் .12)பன்னியான் சந்திப்பு கிழக்கு பக்கம் அடையாளம் தெரியாத 52 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்தார். இச் சம்பவம் 3 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து அவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .போலீசார் இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story