ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்
X
ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கோடித்தண்டலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த கோடித்தண்டலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் புதியதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணபதி ஹோமம், மஹாலஷ்மி ஹோமம்,நவகிரக ஹோமம், உள்ளிட்ட பூஜாளுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாக பூர்ணாவதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரினை யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story