உடைந்த பீர் பாட்டிலை வைத்து பணம் பறித்த இளைஞர் கைது

X

திண்டுக்கல் அருகே வாலிபரின் கழுத்தில் உடைந்த பீர் பாட்டிலை வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த இளைஞர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த சிவா என்பவர் A.வெள்ளோடு வன்னத்துசின்னப்பர் கோவில் ரோடு பிரிவு அருகே நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நல்லாம்பட்டியை சேர்ந்த மணிமுருகன் மகன் சதீஷ்குமார்(25) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை சிவாவின் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த பணத்தைப் பறித்து சென்றது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story