புதுக்கடை: வீட்டில் பிணமாக கிடந்த தொழிலாளி

X

போலீஸ் விசாரணை
குமரி மாவட்டம் மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (54) கூலி தொழிலாளியான இவருக்கு ராஜகுமாரி (44) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சங்கருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி பிள்ளைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவர் சங்கரை விட்டு பிரிந்து விரி விளை பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். சங்கர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கர் தனது வீட்டில் பிணமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் ராஜகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர் . அவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்ட போது, அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு களுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story