இஞ்சிமேடு பெரிய மலை அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோயிலில் பிரதோஷ விழா.

பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பெரியமலை அருள்மிகு திருமணிச்சேறை உடையார் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற புரட்டாசி சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பெரியமலை அருள்மிகு திருமணிச்சேறை உடையார் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற புரட்டாசி சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பெரியமலை அருள்மிகு திருமணிச்சேறை உடையார் கோயிலில் புரட்டாசி மாத சனி பிரதோஷ விழா நடைபெற்றதில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு அருகே உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் கோயில் உட்புற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமர்த்தி உலா நடைபெற்றது. இதில் சேத்துப்பட்டு, பெரணமல்லூர், வந்தவாசி, செய்யார், ஆரணி உள்ளிட்ட பல்வேறு நகரங்கிளல் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரிய மலை சிவன் கோயில் நிர்வாகி பெருமாள் சுவாமிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர். இதேபோல் ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்திலும் சனிக்கிழமை மாலை சனிபிரதோஷ விழா நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் ஆரணி அடுத்த மெய்யூர் மெய்கண்டீஸ்வரர் ஆலயத்தில் சனிபிரதோஷம் முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story