ராமநாதபுரம் காயகல்ப பயிற்சி நடைபெற்றது

மனவளக்கலை மன்றம் சார்பில் காயகல்ப பயிற்சி நடைபெற்றது, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மனவளக்கலை மன்ற அறக் கட்டளை சார்பில் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள மகரிஷி தவமையத்தில் காயகல்ப பயிற்சி நடைபெற்றது, இதில் மனவளக்கலை பேராசிரியர் தரணி முருகேசன் அனைவருக்கும் செயல்முறை விளக்கங்களுடன் காயகல்ப பயிற்சியளித்தார், இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் தலைமையில், செயலாளர் முருகேசன், பொருளாளர் சுமதி, கௌரவத் தலைவர்கள் தியாகராஜன், சுந்தர்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர், இதில் ஆண்கள் இல்லத்தரசிகள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர், பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காயகல்ப பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story