கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த போலீசார்

X
Pudukkottai King 24x7 |28 Oct 2025 12:47 PM ISTநிகழ்வுகள்
அன்னவாசல் அருகே உள்ள குமரமலை கோவிலில் இன்று திருக்கல்யாண திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி அன்னவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருவிழாவிற்கு வந்த பெண் ஒருவர் தனது செல்போனை கூட்டத்தில் தவறவிட்டார். தேடியும் கிடைக்காததால் போலீசார் கீழே கண்டெடுத்த செல்போனை அந்த பெண்மணி இடம் ஒப்படைத்தனர்.
Next Story
