சேலத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

சேலத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 32). இவர் 20 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரிடம் கடந்த சில நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனை செல்போனில் பதிவு செய்து அந்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஸ்ரீதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story