பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
X
பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,அக்.31: பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கோரிக்கை மனுக்களை கொடுத்த பொது மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவ டிக்கை எடுத்து தகுதியான மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு கோட்டாட்சியர் லெனின் தலைமை வகித்தார். பரமத்தி திமுக ஒன்றிய கழக செயலாளர் பி.பி.தனராசு, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர், பரமத்திவேலூர் தாசில்தார் கோவிந்தசாமி, பரமத்தி வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கருணாநிதி, பரமத்தி பேரூர் கழக செயலாளர் ரமேஷ்பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு 259 பயனாளிகளுக்கு ரூ.29.01 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் பழக்கடை காமராஜ், பேரூர் இளைஞரணிஅமைப்பாளர் விக்னேஷ்வரன், துணை அமைப்பாளர்கள் கோபி, ரமேஷ், செல்வகுமார்,பேரூராட்சி உறுப்பினர் நாச்சிமுத்து,வசந்தபுரம் சத்யராஜ், மற்றும் ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள்,சார்புஅணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story