வெளி மாநில லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது

வெளி மாநில    லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது
X
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் ராஜம் தியேட்டர், ஆலங்காட்டுவலசு பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், வெளி மாநில லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் பூபதி, 38, ராமலிங்கம், 26, , ஆகிய இருவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Next Story