புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி ஆறாவது மாநில மாநாடு பூமி பூஜை துவக்கம்.
தமிழக முதல்வர் அவர்களின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில், தலைமை சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார்.வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி மாநாட்டை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்தியூர் ப.செல்வராஜ், கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாவட்ட கழக செயலாளர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், என்.நல்லசிவம், கே.எஸ்.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.அதையொட்டி மாநாட்டிற்கான பூமி பூஜை பணிகள், புதிய திராவிட கழக நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினருமான கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில், இன்று காலை 6 மணியளவில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.பூமி பூஜையில் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


