டூவீலர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பால் வியாபாரி முதியவர் பலி

டூவீலர் மீது டிராக்டர் மோதிய விபத்தில்  பால் வியாபாரி முதியவர் பலி
X
குமாரபாளையத்தில் டூவீலர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பால் வியாபாரி முதியவர் பலியானார்.
குமாரபாளையம் மணிமேகலை தெருவில் வசிப்பவர் கோவிந்தன், 65. பால் வியாபாரி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில், தனது டி.வி.எஸ். 50 வாகனத்தில், பால் கேனுடன், அரசு மருத்துவமனை எதிரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு எதிரில் வேகமாக வந்த டிராக்டர் ஓட்டுனர், டி.வி.எஸ். வாகனத்தின் மீது மோத, நிலைதடுமாறி கீழே விழுந்த பால் வியாபாரி முதியவர் கோவிந்தன் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி, நேற்றுமுன்தினம் இரவு 11:47 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான டிராக்டர் ஒட்டுனர் குமாரபாளையம் அருகே பாறையூர் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன், 42, என்பவரை பிடித்து, விசாரணை செய்து வருகின்றனர்,.
Next Story