ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை நிற்கும் அதிமுகவை கண்டித்து திருச்செங்கோட்டில்திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
Tiruchengode King 24x7 |12 Feb 2026 6:46 PM ISTஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை நிற்கும் அதிமுகவை கண்டித்து திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்செங்கோடு சூரியம் பாளையம் தலைமை தபால் நிலையம்முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். 200 க்கும் மேற்பட்டவர்கள்பங்கேற்பு
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை நிற்கும் அதிமுகவை கண்டித்து திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுகமதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்செங்கோடு சூரியம்பாளையம் தலைமை தபால் நிலையம்முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் தலைமை வகித்தார்.கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முன்னாள் நகர துணை செயலாளர் பகுதி கிளைக் கழக செயலாளர் எஸ் வி ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில்மாவட்ட இணைச்செயலாளர் மைலீஸ்வரன், நகர செயலாளர் குமார்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்நகரச் செயலாளர் சுப்பிரமணியம் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்நகரச் செயலாளர்சீனிவாசன்ஆதித்தமிழர் பேரவை சார்பில் நகரச் செயலாளர் முத்துசாமிஆகியோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தை வஞ்சித்த புறக்கணித்த மோடிதமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது கல்வி நிதி எங்கே போச்சு குடிநீர் விதி எங்கே போச்சு 100 நாள் வேலை திட்ட நிதி என்ன ஆச்சுஎன கோஷங்கள் எழுப்பப்பட்டதுஅமெரிக்க விளைபொருளுக்கு நம்ம ஊரு சந்தையில் அனுமதி விவசாயத்தை அளிக்கின்ற இந்த ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும்மோடியின் சதி செயலுக்கு ஒத்து ஊதி தமிழகத்தை காட்டிக் கொடுக்கும் அதிமுகவை கண்டிக்கிறோம் தமிழ்நாடு தலைகுனியாது எனவும் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில்100 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


