மக்களுடன் முதல்வர் திட்டம் ஆகஸ்ட் 1 தேதி ஊரக பகுதியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம் ஆகஸ்ட் 1 தேதி ஊரக பகுதியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X
பத்திரிக்கை அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் வரும் ஆக. மாதம் 1-ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “ ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் (ஊரகம்) திட்டத்தின் மூலம் முக்கிய அரசு துறைகளின் சேவைகளை, சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலே நடத்தி, மக்கள் பயன்பெறும் நோக்கில் கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி வரை 15 துறைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, மாவட்டத்தில் அரக்கோணத்தில் பெருமூச்சு அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு -ரத்தினகிரி திருமுருகன் திருமண மண்டபம், நெமிலி - ஸ்ரீ .வி.மதுர மஹால், திமிரி - உதய மஹால், வாலாஜா ஜி.எம். மஹால் ஆகிய ஊராட்சிகளிலும் வரும் ஆக., மாதம் 1-ம் தேதி காலை 10 முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story