ஜெகதாபியில் பணம் வைத்த சூதாடிய 11 பேர் மீது வழக்கு பதிவு.ரூ.14,190,3- பைக்குகள் பறிமுதல்.
Karur King 24x7 |16 Sept 2024 11:49 AM GMT
ஜெகதாபியில் பணம் வைத்த சூதாடிய 11 பேர் மீது வழக்கு பதிவு.ரூ.14,190,3- பைக்குகள் பறிமுதல்.
ஜெகதாபியில் பணம் வைத்த சூதாடிய 11 பேர் மீது வழக்கு பதிவு.ரூ.14,190,3- பைக்குகள் பறிமுதல். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 15ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், ஜெகதாபி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெகதாபி நடுத்தெருவை சேர்ந்த வேலுச்சாமி, சரவணன், அருண்குமார், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மலைப்பட்டியை சேர்ந்த பாண்டியன், ராமமூர்த்தி, மற்றும் ஆறு பேர் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 14,190-யும், அவர்கள் ஓட்டி வந்த 3- பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல் துறையினர்.
Next Story