கலவை அருகே வீடு புகுந்து 12 பவுன் நகை மர்ம நபர்கள் திருட்டு

திருட்டு
கலவை அருகே வீடு புகுந்து 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நல்லூர காலனி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவன் (55), தனியார் தோல் தொழிற்சாலை கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (50). தம்பதியருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. இரவு நாடகம் பார்க்க தேவன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார். நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கலவை காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர், திருட்டு நடைபெற்ற வீட்டினை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story