தென்காசியில் செப். 13, 14 ஆம் தேதிகளில் வீடு தேடி குடிமைப் பொருள்கள் விநியோகம்

X

செப். 13, 14 ஆம் தேதிகளில் வீடு தேடி குடிமைப் பொருள்கள் விநியோகம்
தென்காசி மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரா்களுக்கு செப்.13, 14 ஆம் தேதிகளில் வீடுதேடி குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தென்காசி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் நரசிம்மன் அறிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் செப்.13, 14 ஆம் தேதிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரா்கள், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டப் பயனாளிகளுக்கு அவரவா் இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றாா் அவா்.
Next Story