தேனி அருகே 17 வயது இளம்பெண் தற்கொலை

X

தற்கொலை
தேனி உத்தமபாளையம் அருகே கா. புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணமுருகன் இவரது மகள் சாருமதி (17) இவர் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் படிப்பு பிடிக்காமல் பாதியிலேயே நின்றுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கு பாரமாக இருப்பதாக இருப்பதாக எண்ணி மனவேதனையில் இருந்த சாருமதி நேற்று (செப்.12 )வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story