மரங்களை வெட்டி கடத்திய ஊராட்சித்தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு.

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுகாநல்லூரில் அரசு இடத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்திய ஊராட்சித்தலைவர் உள்பட 2 பேர் மீது கண்ணமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுகாநல்லூர் கிராமத்தில் அரசு இடத்தில் இருந்த தீக்குச்சி மரங்களை ஊராட்சித்தலைவர் ரேணு கூறியதின் பேரில் விநாயகமூர்த்தி என்பவர் மரங்களை வெட்டி வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதனை அறிந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் தெரிவித்தனர். இதன்பேரில் காட்டுகாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கண்ணமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார். இப்புகாரின்பேரில் கண்ணமங்கலம் போலீஸார் காட்டுகாநல்லூர் ஊராட்சித்தலைவர் தனபால் மகன் ரேணு(42), மரங்களை வெட்டிய வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் விநாயகமூர்த்தி(40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story