கோகுலம் பொதுப்பள்ளியில் 'பராக்கிரம் - 24' கலை விழா

கோகுலம் பொதுப்பள்ளியில் பராக்கிரம் - 24 கலை விழா
X
கோகுலம் பொதுப்பள்ளியில், பள்ளிகளுக்கு இடையிலான, 'பராக்கிரம் - 2024' எனும் கலை நிகழ்ச்சி
செங்கல்பட்டு அருகே உள்ள நென்மேலியில், கோகுலம் பொதுப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, பள்ளிகளுக்கு இடையிலான, 'பராக்கிரம் - 2024' எனும் கலை நிகழ்ச்சி, நடந்தது. இதில், 25 பள்ளிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதன் துவக்க விழாவில், நடிகர் நாசர், சாய்ராம் குழும கல்வி நிறுவனத்தின் தலைவர் சாய் பிரகாஷ் லியோமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கோகுலம் பள்ளியின் துணை தலைவர்கள் பிரவின், லிஜிஷா விஜயன் மற்றும் பள்ளி முதல்வர் சங்கரநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். அனைவரும் குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர். கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவியருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Next Story