கிருஷ்ண ஜெயந்தி விழா 26-ந்தேதி நடக்கிறது

கிருஷ்ண ஜெயந்தி விழா 26-ந்தேதி நடக்கிறது
X
வேலூர் காட்பாடியில் வருகிற 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்க உள்ளது.
வேலூர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் காட்பாடி காந்திநகரில், வேலூர்-சித்தூர் ரோட்டில் உள்ள ரங்காலயா மஹாலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மாலை 6 மணிக்கு பஜனை மற்றும் கீர்த்தனையும், 6.30 மணிக்கு சந்தியா ஆர்த்தியும், 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு சிறப்பு ஆன்மிக உரையும், 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கிருஷ்ண லீலை உபன்யாசம் மற்றும் கீர்த்தனமும், 12 மணிக்கு மகா அபிஷேகமும், 12.30 மணிக்கு மகா ஆரத்தியும் நடக்கிறது. மாலை 6 மணி முதல் தரிசனம் மேற்கொள்ளலாம். பிரசாரதமும் வழங்கப்படுகிறது. இதில் கிருஷ்ண பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், இஸ்கான் வேலூர் பக்தர்கள் செய்துள்ளனர்.
Next Story