ஆரணியில் இந்துமுன்னணி-பாஜக சார்பில் திருப்பரங்குன்றம் மலையை காக்க ஆர்ப்பாட்டம். இந்துமுன்னணி-பாஜக சேர்ந்த 42 பேர் கைது.
![Arani King 24x7 Arani King 24x7](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவர் கோயில் முன்பு திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி-பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவர் கோயில் முன்பு திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி-பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 42 பேர் கைது செய்யப்பட்டனர். ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவர் கோயில் முன்பு திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்துமுன்னணி மாவட்டதலைவர் தாமோதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் பாஜக மத்திய நலத்திட்ட பிரிவு மாநிலசெயலாளர் சைதை வ.சங்கர், பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்டதுணைதலைவர்கள் தீனன், நித்யானந்தம், வடக்கு மண்டல தலைவர் குணாநிதி, இந்து முன்னணி இளைஞரணி மாவட்டதலைவர் விக்னேஷ், கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன்(பொறுப்பு), இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்.ஐக்கள் மற்றும் போலீஸார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி மற்றும் பாஜக தொண்டர்கள் 42 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Next Story