மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் 450 மாணவ மாணவிகள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் வலையபட்டி அடுத்துள்ள ஷென்ஹில் அகாடமி பள்ளியில் நடைபெற்றது


பள்ளி தாளாளர் ரஞ்சித் முதல்வர் யுக பிரியா மற்றும் குத்துச்சண்டை வீரர் பிரசாத் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன இதில் ஒற்றைக்கம்பு இரட்டைக்கம்பு தொடுபுள்ளி ஆகிய போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளியை சேர்ந்த சுமார் 450 மாணவ மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன போட்டியின் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது போட்டி ஏற்பாடுகளை சிலம்பு ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திர குமார் செயலாளர் மோகன்ராஜ் பொருளாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கங்களை நாமக்கல் மாவட்ட தமிழ் சங்கத்தின் செயலாளர் நாராயண மூர்த்தி வழங்கி சிறப்புரையாற்றினார்

Next Story