உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லத்துவாடி, பரமத்தியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் மற்றும் மோகனூர் பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், லத்துவாடி, பரமத்தியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் மற்றும் மோகனூர் பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், கடந்த 15.07.2025 முதல் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புறபகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கும் வகையில் மனுக்கள் பெறப்பட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம், நாமக்கல் மாநகராட்சி லத்துவாடி, அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரப்பாளையம் நகராட்சி ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, சீராப்பள்ளி பேரூராட்சி ஓடுவன்குறிச்சி கொங்கு குலாலர் சமுதாயக்கூடம், எலச்சிபாளையம் வட்டாரம் கோக்கலை கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம், எருமப்பட்டி வட்டாரம் பொட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பரமத்தி வட்டாரம் எம்.சூரியம்பாளையம் சமுதாயகூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாநகராட்சி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பரமத்தி வட்டாரம் எம்.சூரியம்பாளையம் சமுதாயகூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடியானர். மேலும், உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மோகனூர் பேரூராட்சியில் செயல்படும் அறிவு சார் மையம், மோகனூர் பேரூராட்சி வார சந்தை, வார சந்தை பகுதியில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட நீர்தேக்க தொட்டி, மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு, சிகிச்சை பெறும் நோயாளிகள் விபரம் ஆகியவற்றை மருத்துவர்களிடம் கேட்டறிந்து, சுற்றுபுறத்தை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story



