ராசிபுரத்தில் நடிகர் சூர்யா பிறந்த நாளில் ரசிகர்கள் ரத்ததானம்..

ராசிபுரத்தில் நடிகர் சூர்யாவின் 49-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரசிகர்கள் ரத்ததானம்..
ராசிபுரத்தில் நடிகர் சூர்யாவின் 49-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரசிகர்கள் ரத்ததானம் வழங்கினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் சூர்யாவின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மிகவும் விமர்சையாக கொண்டாடினர். ராசிபுரம் அரசு தலைமை மாவட்ட மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் ரசிகர் மன்ற தலைவர் மோகன் தலைமையில் 5௦ க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கு உயர் அழுத்த பரிசோதனை, எடை, உயரம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்த பின் ரசிகர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்றப்பட்டது. முகாமில் மன்ற நிர்வாகிகள் மணி, சபரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story