பரமத்தி வேலுரில் ரூ. 88 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்.

பரமத்தி வேலுரில் ரூ. 88 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்.
X
பரமத்திவேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ 88 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூர் அக்.16: பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2, 235 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.47.60-க்கும், குறைந்த பட்சமாக ரூ.31.29-க்கும், சராசரியாக ரூ.37.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.88 ஆயிரத்து 188-க்கு வர்த்தகம் நடைபெற்றது.  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு  ஆயிரத்து 540 -கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.31.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.17.19- க்கும், சராசரியாக ரூ.‌27.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 72 ஆயிரத்து 495- க்கும் ஏலம் நடைபெற்றது.
Next Story