மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் (Legal Adviser) பணிக்கு விண்ணப்பம்

மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் (Legal Adviser) பணிக்கு விண்ணப்பம்
X
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் (Legal Adviser) பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 5 இளங்கலை சட்டம் (B.L) படிப்பினை முடித்திருக்க வேண்டும் மேலும் ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் குறைந்தது 5 வருடங்கள் வழக்குரைஞராக பணிபுரிந்து இருக்க வேண்டும் இப்பதவிக்கு ஒரு வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அவ்வொருவருட ஒப்பந்தகாலமானது விண்ணப்பதாரரின் செயல் திறன் அடிப்படையிலேயே அமையும் விண்ணப்பதாரரின் பணி திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் விண்ணப்பதாரரின் ஒப்பந்த காலம் முடிவடையும் முன்பே எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் கோரப்படும் சட்ட ரீதியான கருத்து, கருத்துரை மற்றும் அனைத்து வகையான சட்ட நிகழ்வுகளுக்கும் சட்ட கருத்துரை வழங்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூபாய். 26,000 -/ மட்டும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தரவேண்டிய கடைசி நாள் 13.09.2024 ஆகும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தங்களது விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story