16 வயது இளம் பெண் மாயம்.

16 வயது இளம் பெண் மாயம்.
X
மதுரை பேரையூர் அருகே 16 வயது இளம்பெண் மாயமான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை பேரையூர் அருகே உள்ள பெருங்காமநல்லூர் மேலத் தெருவை சேர்ந்த சிவகுமார் என்பவரின் 16 வயது மகள் பெருங்காமநல்லூர் கள்ளர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி இரவு 10 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களின் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை நேற்று (செப்.11) மதியம் சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்கள்.
Next Story