கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
X

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கழிஞ்சூர் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் மற்றும் பழைய காட்பாடி பகுதியில் கஞ்சா வெற்ற ஒருவர் என இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கழிஞ்சூர் ஏரிக்கரையில் கஞ்சா விற்பதாக விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ ராமமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது ஜாப்ராபேட்டையை சேர்ந்த அய்யப்பன் (27) என்பவர் கஞ்சா விற்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கழிஞ்சூர் மதிநகர் ஏரிக்கரையில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பழைய காட்பாடியை சேர்ந்த கிஷோர் (28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story