டூவீலரில் சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது

டூவீலரில் சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது
X

டூவீலரில் சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது

குடியாத்தம் அருகே டூவீலரில் சாராயம் கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் டி.எஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலு உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த செம்பேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டூவீலரை நிறுத்தியபோது அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் சென்றனர். பின்னர் போலீசார் விரட்டிச் சென்று டூவீலரை மடக்கி பிடித்தனர். அதில் 2 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயம் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து டூவீலரை ஓட்டி வந்த பேரணாம்பட்டு அடுத்த கள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மகன் முத்து (27), செர்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பிரபு (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story