4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 5 பேர் படுகாயம்

4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 5 பேர் படுகாயம்
X
படுகாயம்
ஆந்திரா மாநிலம், குண்டூரில் இருந்து ஐந்து பேர், 'மாருதி சுசுகி கிரான்ட் விடாரா' காரில் சபரி மலைக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4:50 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.பின் தொடர்ந்து வந்த, 'மாருதி பொலினோ' கார் டிரைவர், காரை நிறுத்திவிட்டு விபத்தை பார்வையிட்டார். பண்ருட்டியில் இருந்து சமயபுரம் நோக்கி சென்ற, 'டொயோட்டா இடியாஸ்' கார், பொலினோ கார் பின்னால் வந்து நின்றது.அப்போது, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற வேன், டொயோட்டா இடியாஸ் மற்றும் பொலினோ கார் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், வேனில் வந்த சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த சிவா மகன் பிரபாகரன், 24, உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தால், திருச்சி வழி சாலையில் போக்குவரத்து பாதித்தது. உளுந்துார்பேட்டை போலீசார், வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
Next Story