மாடு திருடிய 4 பேர் கைது: ஆட்டோ, பைக் பறிமுதல்

மாடு திருடிய 4 பேர் கைது:  ஆட்டோ, பைக் பறிமுதல்
X

பைல் படம் 

திருச்செந்தூர் அருகே மாடு திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மாட்டை திருடுவதற்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ, மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள என்.முத்தையாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 21). அதே பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் தனது தோட்டத்தில் மாடு வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலையில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த மாடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் மாடு பற்றி தகவல் கிடைக்கவில்லை. அதை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தினேஷ்பாபுவின் மாட்டை தெற்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (27), குருகாட்டூர் தொட்டியன்குடியிருப்பை சேர்ந்த செல்வகுமார் (40), சின்ன நட்டாத்தியை சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் (35), திருப்புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்து (35) ஆகிய 4 பேரும் திருடி லோடு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பசுமாடு மீட்கப்பட்டது. மேலும், மாட்டை திருட பயன்படுத்திய லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story