திடீரென தீ பற்றி எரிந்த டூவீலரால் பரபரப்பு!

திடீரென தீ பற்றி எரிந்த டூவீலரால் பரபரப்பு!
X

தீ 

விருதம்பட்டு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த டூவீலர் முழுவதுமாக எரிந்து சேதமானது.

வேலூர் அணைக்கட்டு அடுத்த சின்ன ஊனை கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் ( 32). இவர் காட்பாடி விருதம்பட்டில் மாரியம்மன் கோவில் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த புருஷோத்தமன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் எரிந்து கொண்டிருக்கும் தீ மற்ற பகுதிக்கு பரவாமல் இருக்க அங்கிருந்த சிலர் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றினர். இருந்தாலும் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல காட்சியளித்தது. இந்த சம்பவத்தால் விருதம்பட்டு பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விருதம்பட்டு போலீசார் சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.இது குறித்த விருதம்பட்டு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story