திருச்செந்தூரில் சிறு கோள்கள் தின டெலஸ்கோப் பயிற்சி

திருச்செந்தூரில் சிறு கோள்கள் தின டெலஸ்கோப் பயிற்சி
X

டெலஸ்கோப் பயிற்சியில் பங்குபெற்ற மாணவர்கள்

திருச்செந்தூர் செந்தில் முருகன் நடுநிலைப் பள்ளியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் சிறு கோள்கள் தின டெலஸ்கோப் பயிற்சி நடந்தது.

நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி சிறுகோள்கள் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கோள்கள் பற்றியும், தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுபா தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் முத்துச்சாமி,முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கோள்கள் குறித்த விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகளை வழங்கி,

தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story