சிவகாசியில் மேயர் தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி..

சிவகாசியில் மேயர் தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி..
X

 விழிப்புணர்வு பேரணி

சிவகாசியில் மேயர் தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஜூலை14 ஞாயிற்றுக்கிழமை,(கே எஸ் எஸ் திருமண மண்டபத்தில் அம்மன் கோவில்பட்டி) நண்பர்கள் ரத்ததான குழுவினர் நடத்தும் 21வது மாபெரும் உதிரம் கொடை முகாமிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,சிவகாசி மாநகராட்சியின் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் சிவகாசி மாநகராட்சியின் அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை செவிலியர்கள்,நண்பர்கள் ரத்ததான குழுவினர்கள் S.F.R கல்லூரியின் மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் இணைந்து உதிரம் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணியை மேயர் துவக்கி வைத்தனர்.உதிரம் தானம் பற்றிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ் பிரியா,அரசு தலைமை மருத்துவர் Dr.அய்யனார்,மாமன்ற உறுப்பினர்கள் சேவுகன், ரவிசங்கர் என பொதுமக்கள் பங்கு கொண்டனர்.இந்த விழிப்புணர்வு பேரணி சிவகாசி மாரியம்மன் கோவில் முன்பு ஆரம்பித்து கவிதா ஜவுளிக்கடை வாயிலாக நான்கு ரத வீதிகளிலும் பேரணி நடைபெற்றது.

Tags

Next Story