வீட்டின் கதவை உடைத்து தங்க நாணயம் மற்றும் வாட்சுகள் திருட்டு.

வீட்டின் கதவை உடைத்து தங்க நாணயம் மற்றும் வாட்சுகள் திருட்டு.
X

சுவாமியார்மடம் அருகே வீட்டில் முன் பக்க கதவை உடைத்து தங்க நாணயம் மற்றும் வாட்ச்சுகள் திருட்டு நடந்துள்ளது.


சுவாமியார்மடம் அருகே வீட்டில் முன் பக்க கதவை உடைத்து தங்க நாணயம் மற்றும் வாட்ச்சுகள் திருடப்பட்டுள்ளது.

திருவட்டார் அருகே வண்டிபேட்டை சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் யூசப் வயது(67) இவர் அந்த பகுதியில் சொந்தமாக பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார் இவரது மனைவியும் இவர் கூட இருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை நேற்று காலையில் வழக்கம் போல் யூசப் கடைக்கு சென்றார் சுமார் 11 மணி அளவில் அவரது மனைவியும் கடைக்கு சென்றார் மதியம் 2 மணி அளவில் பூசப் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்லும் போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த தங்க நாணயம் - 1 மற்றும் கடைக்கு விற்பனைக்கு வைத்துயிருந்த 5 வாட்சுகள் திருடி சென்று இருந்தது தெரிய வந்தது உடனே திருவட்டார் போலிசுக்கு தகவல் கொடுத்தனர் போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்றது அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பானது.

Tags

Next Story