மதுரவாயலில் சைபர் கிரைம் குற்றவாளி கைது

மதுரவாயலில் சைபர் கிரைம் குற்றவாளி கைது
X

கைது செய்யப்பட்ட தினேஷ் 

தெலுங்கானா மாநிலம் சைபராபாதில் நடந்த இணையதள பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை சைபராபாத் சைபர் கிரைம் போலீசார் மதுரவாயலில் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் சைபராபாதில் நடந்த இணையதள பணமோசடி வழக்கில், சென்னை சாலிகிராமம், மதியழகன் தெருவைச் சேர்ந்த தினேஷ், 36, என்பவருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்கு பதிந்த சைபராபாத் சைபர் கிரைம் போலீசார் தினேஷை தேடி வந்தனர். தற்போது, அவர் மதுரவாயல், பல்லவன் நகரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சைபராபாத் சைபர் கிரைம் ஆய்வாளர் நாகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை வந்தனர். பின், நேற்று முன்தினம் மதுரவாயல் போலீசார் உதவியுடன் மதுரவாயல், மதியழகன் நகரில் தங்கியிருந்த தினேஷை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், தெலுங்கானா மாநிலம் சைபராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இவரிடம் விசாரணை மேற்கொண்ட பின் தான், இந்த சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் எங்கெல்லாம் தங்கி உள்ளனர் என்பது தெரியவரும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story