திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் மற்றும் ரோஜா சாமி தரிசனம் !

திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் மற்றும்  ரோஜா சாமி தரிசனம் !
X

சாமி தரிசனம்

திருச்செந்தூா் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலை திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் வந்தார். அவர் கோவிலுக்குள் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவருடன் பக்தர்கள், பொதுமக்கள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் திருச்செந்தூர் கோவிலுக்கு நேற்று வந்தார். அவரும் மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

இதேபோல் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் கோவிலுக்கு வந்தார். அவர்கள் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த ரோஜாவை பார்த்த பக்தர்கள் அவருடன் நின்று ‘செல்பி’ எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தனர். திருச்செந்தூர் கோவிலில் ஆணி வருஷாபிஷேக தினமான நேற்று சினிமா பிரபலங்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story