பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை !

பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை !
X

போக்குவரத்து போலீசார்

பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தும் இடத்தை கடந்தோ, அல்லது சாலையின் நடுப்பகுதிகளில் நிறுத்தும் நிலை உள்ளது.

இதனால் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நகரின் எல்லா பகுதியிலும் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் , பிரச்சினைக் குரிய இடங்களை கண்ட றிந்து அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராத விதிக்க்கப்படும். விதிகளை மீறினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags

Next Story