பழனியில் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

பழனியில் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
X

மனைவியை கொலை செய்தவர்

பழனியில் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 வருடம் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கடந்த 2015ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் சின்னகண்ணு(55) என்பவரை பழனி தாலுகா போலீசார் கைது செய்தனர். இவரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் பழனி தாலுகா போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி , குற்றவாளி சின்னகண்ணுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 வருடம் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story