பால் வேன் மோதி கட்டிட மேஸ்திரி பலி!

பால் வேன் மோதி கட்டிட மேஸ்திரி பலி!
X

மேஸ்திரி பலி

பரதராமி அருகே பால் வேன் மோதி கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி கூத்தாண்டவர் கோவில் அருகே வசித்தவர் கட்டிட மேஸ்திரி சோமு (வயது 54).இவர் சாமிரெட்டிபல்லி கிராமத்தில் பணி முடித்துவிட்டு வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பரதராமி மெயின்ரோடு கனகர்பட்டி பால்கூட்டுறவு சங்கம் அருகே சென்றபோது சித்தூரில் இருந்து குடியாத்தம் அடுத்த ராமாலை நோக்கி காலி பால்கேன்களுடன் சென்ற பால் வேன் அவர் மீது மோதியது. இதில் சோமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் நிர்மலா, பரதராமி சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் சென்று விபத்தில் இறந்த சோமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரதராமி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story