X
ராமாபுரம் அரசுமாதிரிபள்ளியில் தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும்விழா நடந்தது.
மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை கோசலாதேவி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மோகனசுந்தரம் மற்றும் பள்ளி மேலாண்மைகுழு தலைவி சுமதி மற்றும் குழுஉறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 12 மாணவிகளுக்கும் 35 மாணவர்களுக்கும் மொத்தம் 47மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அழகேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுநிலை ஆசிரியர் பழனிசாமி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story