X
காளிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் கோலாகலமாக நடந்தது.
மல்லசமுத்திரம் அருகேயுள்ள, காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று, 2024–25ம்கல்வி ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. மல்லசமுத்திரம் டவுன் பஞ்., தலைவர் திருமலை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் மாதேஸ்வரி வரவேற்புரையாற்றினார். பி.டி.ஓ., தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றியுரையாற்றினார். எஸ்.எம்.சி.,தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Next Story