X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 27). லாரி டிரைவர். இவர் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, தனது தாயாரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி லாரி டிரைவர் தமிழ்செல்வன் மீது போக்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story