பெண்களுக்கு சமூக நல்லிணக்க விழிப்புணர்வு முகாம்

பெண்களுக்கு சமூக நல்லிணக்க விழிப்புணர்வு முகாம்
X

சமூக நல்லிணக்கம்

புதூர் ஊராட்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் பெண்களுக்கு சமூக நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

வேலூர் மாவட்டம், ஊசூரை அடுத்த புதூர் ஊராட்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் மேற்பார்வையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் சார்பில் பெண்களுக்கான சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். இதில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, போலீசார் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, வளர்க்கும் முறை, பெண் களுக்கான பாதுகாப்பு சட்டங்கள், அரசு பெண்களுக்கு வழங்கும் சலுகைகள், நலத்திட்டங்கள் மற்றும் மனித சமுதாயத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Tags

Next Story