சிவகாசியில்,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு ரத்த தான முகாம்.....

சிவகாசியில்,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு ரத்த தான முகாம்.....
X

ரத்த தான முகாம்

சிவகாசியில்,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு ரத்த தான முகாம் நடத்தினர்.
சிவகாசியில்,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு ரத்த தான முகாம்..... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் ரத்த தான குழு மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையும் இணைந்து மாபெரும் ரத்த தான முகாமை நடத்தினர்.சிவகாசி,அம்மன் கோவில்பட்டி வடபாகம் பகுதியில், மருத நாடார் ஊருணி எதிரே உள்ள கே.எஸ்.எஸ். பெரியகருப்பநாடார் - கே.எஸ்.எஸ்.பழனியப்ப நாடார் திருமண மண்டபத்தில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அய்யனார், டாக்டர் செண்பகாதேவி தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ரத்த தானம் பெறுவதற்கான ஏற்பாடுகளை கண்காணித்தனர். ரத்த தான முகாமில் பெண்கள் ரத்த தானம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிக முறை ரத்த தானம் செய்த நபர்களுக்கு சிறப்பு நினைவு பரிசுகளும், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. ரத்த தான முகாம் ஏற்பாடுகளை, பெருந்தலைவர் காமராஜர் ரத்த தான குழு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story