பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்

பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்
X

மாணவி மாயம்

வேலூர் மாவட்டம்,காட்பாடி பகுதியில் பள்ளிக்கு சென்ற மாணவி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய தாய் காட்பாடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story