சுவாமிமலை : சுவாமிநாத சுவாமி பால்குட கோடபிஷேக விழா !

சுவாமிமலை : சுவாமிநாத சுவாமி பால்குட கோடபிஷேக விழா !
X

ceremony

கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா மார்க்கெட் காய்கனி, இலை, வாழை வியாபாரிகள் ஒருங்கிணைந்து நடத்தும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி பால்குட கோடபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா மார்க்கெட் காய்கனி, இலை, வாழை வியாபாரிகள் ஒருங்கிணைந்து நடத்தும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி பால்குட கோடபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா மார்க்கெட் காய்கனி, இலை, வாழை வியாபாரிகள் ஒருங்கிணைந்து நடத்தும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி பால்குட கோடபிஷேக விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டிற்குரிய விழாவை முன்னிட்டு மார்க்கெட்டில் உள்ள வலம்புரி செல்வ விநாயகருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்ற பின்னர், ஆலயத்திலிருந்து நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்களுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து மாங்குடி, கோணக்கரை உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story