மது விற்ற பெண் சிறையிலடைப்பு

மது விற்ற பெண் சிறையிலடைப்பு
X

மது விற்ற பெண் சிறையிலடைப்பு

கள்ளச் சந்தையில் மதுவிற்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி அதே பகுதியில் அதிக விலைக்கு விற்பதாக பொன்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் பொன்னை டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பெண் ஒருவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து பொன்னை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த சின்னபொண்ணு (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story